
யாழ்.நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லியடி - துன்னாலைப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 9 வயதுச் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(31.07.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது அதே பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய திருமணமான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
