கிளிநொச்சியில் காட்டு யானைகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க சூரியமின்கல யானை வேலி அமைக்கும் வேலை ஆரம்பம்.



காட்டு யானைகளிடமிருந்து விவசாயிகளின் வாழ்வாதார பயிர்களை பாதுகாக்கும் நோக்குடன் சூரியமின்கல யானை வேலி அமைக்கும் வேலைத்திட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த செயற்திட்டம் நேற்று(15.10.2024) இடம்பெற்றுள்ளது.
உலக வங்கியின் நிதியுதவியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் கீழ் பூநகரி கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட செம்மன்குன்று பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த திட்டமிடலானது வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்படுகிறது.
கிளிநொச்சியில் பூநகரி, அக்கராயன்குளம், முழங்காவில் கமநல சேவை நிலையத்திற்குற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த நிகழ்வில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகாரி சா.கேசிகா, பூநகரி கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.குணசீலன், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
