தையிட்டியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டம் நேற்று ஆரம்பமானது.

பொது மக்களது காணிகள் அபகரிக்கப்பட்டு, உரிய அனுமதி பெறப்படாமலேயே இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, இவ்விகாரையை அகற்றுமாறு கோரி ஒரு வருட காலமாக தொடர் போராட்டம் இடம்பெற்று வருகிறது.
பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்த விகாரையில் வழிபாடுகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பை வெளிக்காட்டும் விதமாக இந்த போராட்டம் இடம்பெறுகிறது.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
