இத்தாலியின் சிசிலி தீவில் ஏற்பட்ட சூறாவளியில் சொகுசு படகு ஒன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
8 months ago

இத்தாலியின் சிசிலி தீவில் ஏற்பட்ட சூறாவளியில் பிரித்தானியக் கொடியை ஏந்தி பயணித்த 180 அடி உயரமுடைய சொகுசு படகு ஒன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த படகில் பிரித்தானியா, நியூசிலாந்து, அமெரிக்கா, இலங்கை, அயர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 22 பேர் பயணித்துள்ளனர்.
இந்த விபத்தின் போது, படகில் பயணித்த நான்கு பிரித்தானியர்கள் மற்றும் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட ஏழு பேர் காணாமல் போயுள்ளனர்.
படகிலிருந்த பயணிகளைக் காப்பாற்றும் பணிகளில் கடலோர பாதுகாப்புப் படையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் இணைந்து செயற்பட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
