
சுமார் 45 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப் பொருளை பயண பொதிக்குள் மறைத்து கடத்த முயற்சித்த 21 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடிய பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி இந்த கஞ்சா போதைப் பொருளை ஜெர்மனிக்கு கடத்த முயற்சித்தார் என தெரிவிக்கப்படுகிறது.
கனடிய எல்லை பாதுகாப்பு படையினர் குறித்த பயணப் பொதியை சோதனையிட்டுள்ளனர்.
கடத்தப்படவிருந்த கஞ்சா போதைப் பொருளின் சந்தைப் பெறுமதி 180000 டொலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
21 வயதான ரெனி ஹஸ்தானா ஹென்றி என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான அடிப்படையில் போதைப் பொருளை வெளிநாட்டுக்கு கடத்த முயற்சித்தார் என இந்த பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
