தமிழருக்கு சர்வதேச நீதியும் சுதந்திரத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம். -- அமெரிக்க தமிழ் அரசியல் குழு தெரிவிப்பு

இன்னுமோர் இனப்படுகொலையை தவிர்ப்பதற்கு தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதியும் சுதந்திரத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட புலம்பெயர் தமிழர் அமைப்பு மேலும் தெரிவித்தவை வருமாறு,
எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, சிங்கள தேசிய வாதம் தமிழர்களுக்கு எதிரான பௌத்த அடிப்படைவாதம் காரணமாக இலங்கை தொடர்ச்சியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களையும் தமிழர்களுக்கான உரிமைகளையும் எதிர்த்து வந்துள்ளது.
இன்னுமோர் இனப்படுகொலையை தவிர்ப்பதற்கு தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதியும் சுதந்திரத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம்.
இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதை எதிர்கொள்வதற்கும் தெற்காசியாவில் பாதுகாப்பு ஸ்திரதன்மைக்காகவும் அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் அதற்கு ஆதரவளிக்க வேண்டும் - என்றார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
