காற்று மாசுபாட்டால் உலகளவில் வருடத்துக்கு 7 மில்லியன் பேர் வரை உயிரிழப்பதாகச் சுவாச மருத்துவர்கள் சங்கம் தெரிவிப்பு

காற்று மாசுபாட்டால் உலகளவில் வருடத்துக்கு 7 மில்லியன் பேர் வரை உயிரிழப்பதாகச் சுவாச மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார கல்வி பணியகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அந்த சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் நிரஞ்சன் திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.
தூசி உள்ளிட்டவை நுரையீரலைச் சென்றடையும் போது அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன.
கடந்த காலங்களில், புகைபிடிப்பவர்களுக்கு மாத்திரம் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டிருந்த போதிலும் தற்போது அசுத்தமான காற்றைச் சுவாசிப்பதாலும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விசேட வைத்திய நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக இந்தியாவில், நுரையீரல் பாதிப்படைந்த பெண்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அந்தளவுக்குக் காற்று மாசடைந்து வருவதாகச் சுவாச மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் நிரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
