
கேரளா - கொல்லத்தில் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றம் இன்று முதல் செயற்படவுள்ளது.
இந்தியாவிலேயே முதலாவது முழுமையான டிஜிட்டல் நீதிமன்றமான இதனை, கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் கேரள உச்ச நீதிமன்றத்தில் நடந்த விழாவின் போது உச்ச நீதிமன்ற நீதிபதி திறந்து வைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று முதல் அது செயற்பாட்டுக்கு வருகின்றது.
இந்த நீதிமன்றத்தில் மக்கள் 24 மணி நேரமும் வழக்குகளை தாக்கல் செய்யலாம்.
பிணை பெறுவதற்குக் கட்சிக்காரர்கள் மற்றும் பிணைதாரர்கள் முன்னிலையாகத் தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் பிணையைப் பெறுவதற்கான ஆவணங்களை இணையம் மூலம் பதிவேற்றம் செய்தால் போதுமானதாகும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
