
யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் சேவை மீண்டும் எதிர்வரும் ஓகஸ்ட் ஆரம்பமாகும் என்று தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் புனரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்ட மாகோ- அநுராதபுரம் இடையிலான புகையிரத பாதை பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
புதிய புகையிரத பாதை மாகோ புகையிரத நிலையத்துக்கு அருகில் உள்ள பழைய புகையிரத பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வீதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி திறந்து வைக்க வாய்ப்புள்ளது.
முன்னதாக இந்திய உதவியுடன் மாகோ - வவுனியா - காங் கேசன்துறை போக்குவரத்து வசதிக்காக தண்டவாளங்கள் திருத்தப்பட்டன. தற்போது மாகோ - அனுராதபுரம் வரையான புகையிரதப் பாதை திருத்தம் செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
