
அம்பாறை - கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம் செய்யப்பட்டது.
அம்பாறை மாவட்ட மாவீரர் பணிக்குழுவின் ஏற்பாட்டில் இந்த சிரமதானப் பணிகள் நடைபெற்றன.
பணிக்குழுவினர், மாவீரர்களின் குடும்பத்தினர், பொதுமக்களின் பங்களிப்பில் இந்தத் துயிலும் இல்லம் துப்புரவு செய்யப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லமாக கஞ்சிகுடிச்சாறு துயிலும் இல்லம் உள்ளது.
தமிழ் மக்களின் இன விடுதலைப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
