மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிசாரின் விசேட சுற்றிவளைப்பில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 8 பேர் நேற்று (04) கைது
4 months ago

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிசார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 8 பேரை நேற்று (04) இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் பல குற்றச் செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஏறாவூர் பொலிஸ் நிலைய பிரதேசத்தைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு அந்தந்த நீதிமன்ற நியாயதிக்க எல்லையிலுள்ள நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்து பின்னர் நீதிமன்றங்களுக்கு முன்னிலையாகாமல் இருந்தவர்களுக்கே பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியவர்களை கண்டறிவதற்காக முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
