யாழில் குடிதண்ணீர் என நினைத்து கல்சியம் நீக்கியைத் தவறுதலாக அருந்தியவர் உயிரிழந்துள்ளார்.

2 months ago



யாழில் குடிதண்ணீர் என நினைத்து கல்சியம் நீக்கியைத் தவறுதலாக அருந்தியவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்.திருநெல்வேலியைச் சேர்ந்த தாசன் மைக்கல் (வயது-85) என்பவரே உயிரிழந்தவராவார்.

கடந்த 14ஆம் திகதி தண்ணீர் என நினைத்து கல்சியம் நீக்கியை இவர் அருந்திய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

அண்மைய பதிவுகள்