கொழும்பு நீதிமன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வவுனியா மேல் நீதிமன்றம் முன்பாக பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

2 months ago



கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வவுனியா மேல் நீதிமன்றம் முன்பாக அகில இலங்கை நீதிமன்ற ஊழியர் சங்கத்தால் நேற்று முன்தினம் முதல் பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதில், திறந்த நீதிமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு பிரயோகத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். 

நீதிபதிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா? என அப் பதாகை மூலம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.